சமூக தளங்களில் முதலிடத்தில் பேஸ்புக் ( Face Book )

சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களாக ஆர்குட் மற்றும் பேஸ்புக் ஆகிய தளங்கள் இன்டர்நெட் மக்களிடையே புகழ் பெற்ற தளங்களாக இயங்குகின்றன. ஆன்லைன் மக்கள் தொகை இந்தியாவில் 4 கோடியே 70 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்களைத் தங்கள் பக்கம் இழுக்க ஆர்குட் மற்றும் பேஸ்புக் தளங்களிடையே எப்போதும் போட்டி இருந்து கொண்டுள்ளது.

அண்மையில் பேஸ்புக் அதன் தளத்தில் ஒரு அப்ளிகேஷன் பைலை பதிந்து பயன்படுத்த அனுமதி தந்துள்ளது. இதனைப் பயன்படுத்தினால், கூகுள் இயக்கும் ஆர்குட் தளத்திலிருந்து, காண்டாக்ட் தகவல்கள் அனைத்தையும் எளிதாகக் கொண்டு வரலாம். குறிப்பாக ஆர்குட் மற்றும் பேஸ்புக் ஆகிய இரண்டு தளங்களிலும் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள், இதைப் பார்த்தால் தங்களுடைய அக்கவுண்ட் டேட்டாவினை பேஸ்புக்கிற்குக் கொண்டு போக எண்ணுவார்கள். இதன் மூலம் பேஸ்புக்கின் ஆன் லைன் ஜனத்தொகை உயரும். இந்த வகையில் இந்தியாவில் ஆர்குட், பேஸ்புக் தளத்திலிருந்து சரியான ஆபத்தைத்தான் சந்தித்துள்ளதாக, ஆன்லைன் விஷயங்களில் ஆய்வு நடத்துபவர்கள் கருதுகின்றனர்.

அக்டோபர் 1 அன்று இந்த அப்ளிகேஷன் தரப்பட்டு பலரும் இதனைப் பயன்படுத்திப் பார்க்க முயன்றனர். அப்போது பிரச்சினைகள் பல ஏற்பட்டு, அனைவரும் தங்கள் விரக்தியைட் தெரிவித்தனர். மறுநாளே பிரச்சினை சரி செய்யப்பட்டு, பேஸ்புக் நிர்வாகம் மன்னிப்பு கேட்க, பலரும் தங்கள் டேட்டாவினை பேஸ்புக்கிற்கு மாற்றிக் கொண்டனர். இது பற்றி கூகுள் நிறுவனத்தின் ஆர்குட் தள நிர்வாகிகளைக் கேட்ட போது தாங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை ஒரு சோஷியல் நெட்வொர்க் உள்ளாக சிறைப் பிடித்து வைக்க விரும்பவில்லை என்றும், யாரும் எதனையும் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.

ஆனால் பேஸ்புக்கைப் பொருத்தவரை, இது அதன் பலத்தைக் காட்டும் முயற்சியாகும். ஆகஸ்ட்டில் மட்டும் இதன் ஜனத்தொகை பத்து லட்சம் உயர்ந்தது. ஆனால் ஆர்குட் ஜனத்தொகை 20 லட்சம் குறைந்தது. இப்படியிருக்க புதிதாய் பேஸ்புக் தரும் அப்ளிகேஷன் இன்னும் பலரை, அத்தளத்திற்கு மாற்றிக் கொள்ள தூண்டுதலாய் இருக்கிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்